உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிவகங்கையில் வருடாபிேஷக விழா

 சிவகங்கையில் வருடாபிேஷக விழா

சிவகங்கை: சிவகங்கை நேருபஜார் செல்வகணபதி கோயிலில் வருடாபிேஷக விழா, திருமலை கடம்பவன அய்யனார் கோயில் கும்பாபி ேஷகம் நடந்தது. சிவகங்கை நேருபஜார் செல்வகணபதி கோயிலில் டிச., 6 ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் வருடாபிேஷக பூஜை துவங்கியது. தொடர்ந்து ேஹாமம், வாஸ்து சாந்தி, முதல் கால பூஜை, சங்கடஹர பூஜை நடைபெற்றது. டிச., 7 அன்று காலை 7:00 மணிக்கு பஞ்சகவ்ய பூஜை, ஜெப ேஹாமம், மகா அபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் செல்வகணபதி எழுந்தருளினார். 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. கும்பாபிேஷக விழா சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட திருமலை கடம்பவன அய்யனார் கோயில் கும்பாபிேஷகம் டிச., 6 அன்று காலை 10:35 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை, டிச., 7 அன்று காலை 6:30 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், நாடி சந்தனம், பூர்ணாகுதி நடந்தது. காலை 9:45 மணி முதல் 10:45 மணிக்குள் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன், கணேசகுருக்கள், திருமலை சேதுநகர் கிராமத்தார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ