மேலும் செய்திகள்
கிராம சபை தீர்மானத்தை மதிக்காத வன அதிகாரிகள்!
17-Dec-2024
தேனி : தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, சின்னமனுார், தேனி, பெரியகுளம் பகுதிகளில், 7,500 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முருங்கை காய் வரத்து இல்லை.தேனி உழவர் சந்தையில் நேற்று முருங்கை காய் கிலோ 175 ரூபாய்க்கு விற்பனையானது. சதைப்பற்று குறைந்து இருந்ததால், கிலோவிற்கு 15 காய்கள் இருந்தன.வியாபாரி நாகராஜ் கூறுகையில், ''கடந்த வாரம் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தோம். தற்போது அந்த வரத்தும் இல்லை,'' என்றார்.
17-Dec-2024