உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை உஷ்ணத்தால் மின்கட்டணம் அதிகரிப்பு! தவிப்பில் ஏழை, நடுத்தர மக்கள்

கோடை உஷ்ணத்தால் மின்கட்டணம் அதிகரிப்பு! தவிப்பில் ஏழை, நடுத்தர மக்கள்

திருப்புவனம் : தமிழகத்தில் நிலவும் கடும் கோடை வெயில் காரணமாக மின் நுகர்வு அதிகரித்ததால் வீடுகளில் மின்கட்டணம் உயர்ந்திருப்பது நடுத்தர வர்க்கத்தினரை கவலை அடைய செய்துள்ளது.இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்.,முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை ஏழு மணிக்கு மேல் வெப்பத்தின் தாக்கம்உள்ளது.கோடை வெயில் காரணமாக வீடுகளில் புழுக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் பலரும் வீடுகளில் வேறு வழியின்றி மின்விசிறி, ஏ.சி., க்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் வீடுகளில் நீண்ட நேரம் ஏசி, மின்விசிறி பயன்பாட்டில் இருந்ததால் மின்கட்டணமும் உயர்ந்துள்ளது.கோடை காலத்தில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தெளித்து ஓரளவிற்கு வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து வந்தனர். இதனால் தண்ணீரின் தேவையும் அதிகரித்ததால் அடிக்கடி வீடுகளில் குடிநீர் மோட்டாரை பயன்படுத்தி வந்தனர். உயர்ந்த மின்கட்டணத்தால் பொதுமக்கள் பலரும் தவித்து வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் 95 கிராமங்களில் 46 ஆயிரத்து 971 மின் இணைப்புகள் உள்ளன. சாதாரணமாக இரு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் ஆயிரம் ரூபாய் வரும்.

இரட்டிப்பான மின்கட்டணம்

தற்போது மின் கட்டணம்இரட்டிப்பாகி ரூ.2 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.குறைந்த பட்சம் 300 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு இம்முறை ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதித்துள்ளனர்.கோடை வெயிலின் தாக்கம் மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில் மின்சாதன பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே அடுத்த முறையும் மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை