உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயில்லாக் கண்மாய் மீன்பிடித்திருவிழா

தாயில்லாக் கண்மாய் மீன்பிடித்திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் நிறைய மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.ம.கோவில்பட்டி அருகே தாயில்லாக் கண்மாய் ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடைப்பணிகள் முடிவற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு ஆயக்கட்டுதாரர்கள் மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.கரைகளில் காத்திருந்த பொதுமக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர். பலருக்கும் கெண்டை, கெளுத்தி, விரால் என நிறைய மீன்கள் கிடைத்தது. இதனால் மீன்பிடித் திருவிழாவிற்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை