குறைதீர் கூட்டம்
சிவகங்கை: காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் மே 9 ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் குறைதீர் கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் விவசாயம் சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.