உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 267 பேருக்கு கடனுதவி 

267 பேருக்கு கடனுதவி 

சிவகங்கை: சிவகங்கையில் பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறுபான்மையினருக்கு தொழில் கடனாக ரூ.31.19 லட்சத்தை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு கலெக்டர் தலைமை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறு தொழில் கடனாக 189 மகளிர் உதவும் இஸ்லாமிய சங்கத்தினருக்கு ரூ.19.49 லட்சமும், மகளிர் உதவும் கிறிஸ்தவ சங்கத்தினர் 78 பேருக்கு ரூ.11.70 லட்சம் என 267 பயனாளிகளுக்கு ரூ.31.19 லட்சம் மதிப்பிலான கடனுதவி தொகையை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ