/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இனி எல்லாம் சுகமாகட்டும்... 2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
இனி எல்லாம் சுகமாகட்டும்... 2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
'இப்பதான் 2024ம் ஆண்டு பிறந்தது போல் இருந்தது. அதற்குள் டிச.,31 வந்துவிட்டதா' என ஆச்சரியப்படும் அளவிற்கு காலம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் 2024 மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கும். சிலருக்கு 'நெருக்கடி' ஆண்டாகவும், பலருக்கு 'பவர்புல்' ஆண்டாகவும் இருந்திருக்கும். பிறக்கப்போகும் 2025 சுகமான, வளமான வரம் தரும் ஆண்டாக அமையட்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்,வேண்டுதலும். 2024 எப்படி இருந்தது. 2025 எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் என்ன கூறுகிறார்கள்...