உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரான்மலையில் உழவாரப்பணி

பிரான்மலையில் உழவாரப்பணி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இக்கோயில் சங்க இலக்கியத்தில் பாடல் பெற்றது.இக்கோயிலில் திண்டுக்கல் திருநாவுக்கரசர் உழவாரப்பணி குழுவினர் சார்பில் 100க்கும் மேற்பட்ட சிவத்தொண்டர்கள் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர். உழவாரப் பணியை முன்னிட்டு மூன்று நிலைகளில் உள்ள கோயில்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டது. சிவத்தொண்டர்கள் அனைவருக்கும் பிரான்மலை வள்ளலார் சபை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை