வியாபாரியிடம் ரூ.1.60 லட்சம் வழிப்பறி
சிங்கம்புணரி: மதுரை மாவட்டம், நல்லுார் டிரைவர் தங்கபாண்டி. இவர் கடலை மிட்டாய் கம்பெனி வேனில் வசூலுக்கு சென்று, திருப்புத்துாரில் இருந்து மதுரை நோக்கி சென்றார். எஸ்.எஸ்., கோட்டை அருகே டூவீலரில் வந்த மர்ம நபர்கள், வேன் கதவு திறந்து இருப்பதாக கூறினர். இதை நம்பி, வேன் டிரைவரும், உதவியாளரும் இறங்கி பார்த்தனர். அப்போது வண்டியில் இருந்த ரூ.1.60 லடசத்தை வழிப்பறி செய்து தப்பினர். எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.