உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்களுடன் முதல்வர் நலத்திட்டம் 337 பயனாளிக்கு ரூ.22.65 லட்சம் உதவி 

மக்களுடன் முதல்வர் நலத்திட்டம் 337 பயனாளிக்கு ரூ.22.65 லட்சம் உதவி 

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர்' திட்ட விழாவில்337 பயனாளிகளுக்கு ரூ.22.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.சிவகங்கையில் நடந்த விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர் (ஆயதீர்வை) ரங்கநாதன் வரவேற்றார். சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாங்குடி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர்கார்கண்ணன், திருப்புவனம் ஆவின் தலைவர் சேங்கைமாறன், நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் 337 பயனாளிகளுக்கு ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். சிவகங்கை தாசில்தார் சிவராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை