உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழில் துவங்க மானிய கடன்

தொழில் துவங்க மானிய கடன்

சிவகங்கை: ஆதிதிராவிட, பழங்குடியின சமூக மேம்பாட்டிற்காக தாட்கோ மூலம் மானிய கடன் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ஆதிதிராவிட, பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் http://newscheme.tahdco.comஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு தொகையில் 35 சதவீதம் அல்லது ரூ.3.5 லட்சம். இதில் எது குறைவோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.தவணை தொகையை தவறாமல் திரும்பி செலுத்தினால், மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை