புகையிலை ஒழிப்பு விழிப்பு ஊர்வலம்
சிவகங்கை; சிவகங்கையில் புகையிலை இல்லா சமுதாயம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் (பொறுப்பு) பார்த்திபன் வரவேற்றார். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம் ராமசந்திரா பூங்காவில் நிறைவு பெற்றது. அரசு மகளிர் கல்லுாரி மாணவிகள், நர்சிங் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர்.