குறைதீர் கூட்டத்தில் 42 பேருக்கு ரூ.11.87 லட்சம் நலத்திட்ட உதவி
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ.11.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். -பொது குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் 389 மனுக்களை கலெக்டர் பெற்றார். கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ.11.87 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் மகளிருக்கான கால்பந்து, கோ- கோ, கயிறு இழுத்தல், கபடி, கோலப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பெண்களுக்கு முதல் மூன்று பரிசுக்கான தொகையை கலெக்டர்வழங்கினார். சிறந்த மகளிர் குழுவிற்கு 'மணிமேகலை விருது' வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.