உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பேறுகால அவசர சிகிச்சை  கட்டடம் திறப்பு எப்போது

பேறுகால அவசர சிகிச்சை  கட்டடம் திறப்பு எப்போது

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 200 படுக்கைகள் உள்ளன. கர்ப்பிணிகளுக்கு 180 படுக்கைகள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 20 படுக்கைகள் உள்ளன. கடந்த ஆண்டு 4,460 பிரசவம் நடந்துள்ளது. இதில் 4553 குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவக் கல்லுாரி துவங்கியதில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. மகப்பேறு பிரிவில் கூடுதல் படுக்கை வசதியுடன் மகப்பேறு பிரிவு கேட்டு நீண்ட நாட்களாக மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதன் பெயரில் கடந்த ஆண்டு ரூ.10.50 கோடி மதிப்பில் 50 படுக்கையுடன் கூடிய ஒருங்கிணைந்த பேறுகால அவசரசிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டம் கட்டப்பட்டு பணியானது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.கட்டடம் கட்டப்பட்டு 4 மாதம் கடந்த நிலையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் சிவகங்கை வருகை தந்தபோது இந்த புதிய கட்டம் திறக்கப்படும் என டாக்டர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் கட்டடம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாம் இடநெருக்கடியை தவிர்க்க கட்டி முடிக்கப்பட்ட பேறுகால அவசரசிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடத்துக்கு மின் இணைப்பு கொடுத்து விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை