உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  தென்காசியில் அரசு வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டி கொலை

 தென்காசியில் அரசு வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டி கொலை

தென்காசி: தென்காசியில், பட்டப்பகலில் அரசு வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே ஊர்மேலழகியானை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி, 46; செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார். இவருக்கு, மனைவி ராஜாத்தி, 43, மகன், மகள் உள்ளனர். தென்காசி நடுபல்க் சிக்னல் அருகே தன் வழக்கறிஞர் அலுவலகத்தில், நேற்று மதியம், 12:00 மணிக்கு அவர் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு புகுந்து, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி தப்பினார். உயிருக்கு போராடிய முத்துகுமாரசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் உயிரிழந்தார். கொலையை கண்டித்தும் கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தியும், தென்காசி நீதிமன்ற வழக்கறிஞர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., அரவிந்த் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார். கொலை தொடர்பாக, ஊர்மேலழகியானை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரை போலீசார் தேடுகின்றனர். இவரும், வழக்கறிஞரும் உறவினர்கள். எனவே, சொத்து பிரச்னையால் கொலை நடந்ததா அல்லது வேறு தனிப்பட்ட காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை