மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
மாணவனுக்கு தொல்லை; சக மாணவர்கள் 4 பேர் கைது
15-Dec-2025
சேதுபாவாசத்திரம்:தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே சுப்பம்மாள்சத்திரத்தை சேர்ந்தவர் கஜினி முகமது, 55; மீனவர், இவர் தனக்கு சொந்தமான நாட்டு படகில் அதே பகுதியை சேர்ந்த காமராஜ், 30, என்பவருடன் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.அப்போது, கடலில் சூறைக்காற்று வீசியதால், நாட்டு படகு கடலில் கவிழ்ந்தது. இதில், மீனவர்கள் இருவரும் கடலுக்குள் தவறி விழுந்தனர். அப்போது, மீனவர் காமராஜ் மட்டும் நீந்திச் சென்று, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களின் படகில் சேர்ந்தார். கரை திரும்பிய மீனவர்கள் சேதுபாவாசத்திரம் கடலோர போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பகுதியில், இறந்த நிலையில் கஜினி முகமது உடல் மீனவர்கள் வலையில் சிக்கியது. கடலோர போலீசார் கஜினி முகமது உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
15-Dec-2025
15-Dec-2025
15-Dec-2025