உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆலோசனை

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆலோசனை

உத்தமபாளையம்: மதுரை வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி சௌமியா தலைமையில் மாணவிகள் குழு பண்ணைப்புரத்தில் கிராமப்புற பணி அனுபவ திட்டத்தின் கீழ் இப்பகுதியில் தங்கி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். வாழை பயிரை தாக்கும் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஒட்டுப் பொறி மூலம் கவர்ந்திழுத்து அழிக்கலாம். இது பல பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்தும் பொறியாகும். பெரிய இலைப் புழுக்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒரு எக்டருக்கு 15 பொறிகளை வைத்தால், வெள்ளை ஈக்களை அழிக்க முடியும் என்று விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ