உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு

மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு அருகே செங்குளத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகள் சுப்புலட்சுமி 28,க்கும்,ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சீர்வரிசையாக சுப்புலட்சுமிக்கு 15 பவுன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை கொடுத்தனர். திருமணமான நாளிலிருந்து வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். சுப்புலட்சுமியின் ஆறு பவுன் நகையை அடகு வைத்து கணவர் வேலைக்கு செல்லாமல் செலவு செய்து விட்டார். மீதி நகைகளை சுப்புலட்சுமி தனது பெற்றோர் வீட்டில் பாதுகாப்பாக கொடுத்து விட்டார். இதனால் கணவர் கார்த்திக் அவரது உறவினர்கள் சரோஜா, நாகராஜ், பிரேமா, ஈஸ்வரி, முருகன் ஆகியோர் சுப்புலட்சுமியை வீட்டிற்குள் விடாமல் கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். சுப்புலட்சுமி தேனி எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை