உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருமகளை மிரட்டிய மாமனார் மீது வழக்கு

மருமகளை மிரட்டிய மாமனார் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பிஸ்மி நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா 40, இவரது கணவர் சந்திரமோகன் சில மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். சந்திரமோகனுக்கு சொந்தமான 20 சென்ட் இடம் பிஸ்மி நகரில் உள்ளது. அந்த இடத்தை பார்ப்பதற்காக மஞ்சுளா தனது மகளுடன் இரு நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தில் மஞ்சுளாவின் மாமனார் வீர சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த சடையப்பன் 73, கொடுவிலார்பட்டி பெரியசாமி 63, ஆகியோர் இருந்துள்ளனர்.அப்போது அத்துமீறி அந்த இடத்தில் நுழைந்ததாக கூறி மஞ்சுளா தனது மாமனார் சடையப்பனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். சடையப்பன், பெரியசாமி ஆகியோர் மஞ்சுளை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மஞ்சுளா புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி