உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதல்வர் திறனறித்தேர்வு எழுதும் 1948 அரசுப்பள்ளி மாணவர்கள்

முதல்வர் திறனறித்தேர்வு எழுதும் 1948 அரசுப்பள்ளி மாணவர்கள்

தேனி : மாவட்டத்தில் ஜன.,25ல் நடக்க உள்ள முதல்வர் திறனறித்தேர்வினை அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கம் 1948 மாணவர்கள் எழுத உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் திறனறித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அளவில் தலா 500 மாணவர்கள், மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டிற்கு தலா ரூ.10ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இத்தேர்வு ஜன.,25ல் மாநில அளவில் நடக்கிறது. தேர்வில் காலை10:00 மணி முதல் 12:00 மணி வரை கணிதம், மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை அறிவியல், சமூக அறிவியல் வினாக்கள் என இரு பகுதிகளாக நடக்கிறது. மாவட்டத்தில் 8 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. 97அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 1948 மாணவர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை