உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில கலைத்திருவிழா போட்டி பங்கேற்க 346 மாணவர் தேர்வு

மாநில கலைத்திருவிழா போட்டி பங்கேற்க 346 மாணவர் தேர்வு

தேனி: மாவட்டத்தில் நடந்து முடிந்த கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.மாணவர்களின் கலை திறமைகளையும், கலைமீதான ஆர்வத்தை வெளிகொண்டு வரவும் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். வீரபாண்டியில் மாவட்ட போட்டிகள் நவ.,11 முதல் 20 வரை நடந்தன. இதில் 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதலிடம் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 183 பேர், உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 163 பேர் என 346 பேர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மாநில போட்டிகள் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிச., முதல் வாரத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை