உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுபாரில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து

மதுபாரில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து

தேனி: தேனி அருகே டொம்புச்சேரியில் மதுபாரில் நடந்த தகராறில் உப்புக்கோட்டை மோகனுக்கு கத்திகுத்து விழுந்தது.தேனி உப்புக்கோட்டை மோகன் 29. தனியார் பஸ் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் 27. இருவரும் டொம்புச்சேரியில் உள்ள மதுபாருக்கு சென்றனர். மது குடித்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் மனோஜை மதுபாட்டிலால் தாக்கினார். மனோஜ் கத்தியால் மோகனை குத்தினார். இதில் காயமடைந்த மோகன் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ