உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேட் வால்வு சேதம் வீணாகும் குடிநீர்

கேட் வால்வு சேதம் வீணாகும் குடிநீர்

கூடலுார் : கூடலுார் கருணாநிதி காலனி அருகே மாநில நெடுஞ்சாலையில் பகிர்மான குழாய் கேட்வால்வு உள்ளது. சேதமடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கேட்வால்வை சுற்றிலும் தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் சென்று சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே சீதோஷன நிலை மாற்றத்தால் மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில் சுகாதாரக் கேடான குடிநீர் சப்ளை ஆவதால் மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை