உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மகள் மாயம்: தாய் புகார்

 மகள் மாயம்: தாய் புகார்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் காயத்திரி 37, இவரது மகள் வர்ஷினி 17, அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் கடையில் இருந்து தனது தந்தை தபால் அலுவலத்திற்கு வரச்சொன்னதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் தாய் காயத்ரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தேடியும் தகவல் கிடைக்கவில்லை. தாயார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !