உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்ன வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை

சின்ன வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை

சின்னமனுார்: 'சின்ன வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி விவசாயிகள் எளிதாக வயல்களுக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, சின்னமனுார் நீரினை பயன்படுத்துவோர்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சின்னமனூர் சின்ன வாய்க்கால் மூலமாக 1800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முல்லைப் பெரியாற்று நீர், தாமரைகுளம், கருங்கட்டான்குளம் உபரி நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்கிறது.சின்னமனுாரில் இந்த வாய்க்கால் கரை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேளாண் பணிகள் மேற்கொள்ள வயல்களுக்கு செல்ல முடியவில்லை. விளைந்த விளை பொருட்களை கொண்டு வர முடியவில்லை.எனவே கலெக்டர் ஷஜீவனா தலையிட்டு, சின்ன வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை