கொடி நாள் நிகழ்ச்சி
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் முப்படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் 18 பேருக்கு ரூ.2.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 'அரசு அலுவலர்கள், பொது மக்கள் கொடி நாள் நிதி வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.', என்றார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜகுமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.