மேலும் செய்திகள்
மகள், பேத்திகள் மாயம்: தந்தை புகார்
11-Jan-2025
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் 47. மேல்மங்கலம் வைகை அணை ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார். ஜன.22ல் வியாபாரம் செய்து விட்டு இரவு 11:00 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் இவரது மனைவி பாண்டீஸ்வரி 36. பார்க்கும்போது தர்மராஜ் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் தனது கணவரை காணவில்லை என ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு மேல்மங்கலம் வராகநதியில் தர்மராஜ் உடல் மிதந்தது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், தர்மராஜ் கொலையா, தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.-
11-Jan-2025