உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

தேனி புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

தேனி, :' தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வரும் 2ம் ஆண்டு புத்தகத்திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை நடந்த இலக்கிய அரங்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் பத்மினிபாலா, லட்சுமி குமரேன் பங்கேற்று பேசினர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன்சுல்தானா 'சிகரம் நம் உயரம்' என்ற தலைப்பில் பேசினார். ஏற்பாடுகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுசிகலா, சி.இ.ஓ., இந்திராணி, தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ