உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 450 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வைகை அணையில் இருந்து டிச.,18 முதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து சில நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும், சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது.நேற்று முன்தினம் வினாடிக்கு 350 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர், நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 450 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று வைகை அணை நீர்மட்டம் 56.63 அடி ( அணை மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து ஏதும் இல்லை. மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை