உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான குண்டுமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் முருகேஷ் 20. இவர், கோட்டயம் பகுதியில் படித்து வந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனிடையே மாணவி மாயமானதை குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மூணாறு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் பாலக்காடு அருகே சோலையாறு பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார், சோலையாறு பகுதிக்கு சென்று மாணவியை மீட்டு, முருகேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !