உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அணைகளில் உள்ள நீரில் மின் உற்பத்திக்கு வாய்ப்புள்ளதா: மாவட்டத்தில் ஆய்வு நடத்த மின் வாரியம் உத்தரவு

அணைகளில் உள்ள நீரில் மின் உற்பத்திக்கு வாய்ப்புள்ளதா: மாவட்டத்தில் ஆய்வு நடத்த மின் வாரியம் உத்தரவு

பெருகி வரும் மக்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தற்போது அனல் காற்று வீசுவதால் மின் நுகர்வு உச்சத்தை எட்டியுள்ளது. எனவே மின் உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன வழிகள் உள்ள தோ, அந்த வழிமுறைகளை பின்பற்ற அரசு கேட்டுக் கொண்டுள்ளது.தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை எடுத்து 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீரை எடுத்து ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாற்றில் குருவனூத்து பாலம், குள்ளப்பகவுண்டன்பட்டி, வைகை அணை போன்ற இடங்களில் மைக்ரோ மின் நிலையங்கள் மூலம் குறைந்த மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.தற்போது இந்த இடங்களை தவிர்த்து சண்முகாநதி அணை 52.5 அடி, மஞ்சளாறு அணை 57 அடி , - சோத்துப்பாறை அணை 126 அடி கொள்ளளவு கொண்டது. இந்த 3 அணைப்பகுதிகளிலும் மின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வைகை அணையில் உள்ளதை போன்று அமைக்கலாமா அல்லது கூடுதல் மெகாவாட் மின் உற்பத்திக்கு சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதைப் பற்றிய ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது , தேனி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் மின் உற்பத்திக்கான வாயப்புக்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ