உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பராமரிப்பு உதவி தொகை வழங்கல்

பராமரிப்பு உதவி தொகை வழங்கல்

தேனி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நிதி ஆதரவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சமூக பொறுப்பு நிதியில் இருந்து நிதி பெறப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பெற்றோர்களை இழந்த 35 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை