| ADDED : ஆக 16, 2011 11:48 PM
தேனி : கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் தேனி
மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் இருந்து
மருந்து கழிவுகள், ஆஸ்பத்திரி உயிர் கழிவுகள், மீன், கோழி கழிவுகள், மக்காத
குப்பைகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு நள்ளிரவில் தேனி மாவட்டத்திற்குள்
வந்து ஏதாவது ஒரு கிராமப் பகுதிகளில் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.
இக்கழிவுகளால் துர்நாற்றமும், சுற்றுப்புற சுகாதார சீர்கேடும் ஏற்படுவதோடு,
தொற்றுநோய்களும் பரவுகிறது.கடந்த வாரம் ஓடைப்பட்டி அருகே கள்ளபட்டியில்
செயல்படும் பன்றி வளர்ப்பு கூடத்திற்கு கேரளாவில் இருந்து கோழி, மீன்
கழிவுகள் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பழனிச்சாமி
என்பவரை கைது செய்தார்.இதனை தொடர்ந்து அந்த பன்றி வளர்ப்பு கூடத்தை
கேரளாவிற்கு மாற்ற உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம், கேரளாவில் இருந்து
கழிவுகள் ஏற்றி வரும் லாரிகள் உள்ளே நுழைய தடை விதித்தது.பிரவீண்குமார் அபினபு எஸ்.பி., கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு சோதனை
சாவடிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து, கழிவுகள் ஏற்றி வரும் லாரிகளை 24
மணி நேரமும் கண்காணித்து, திரும்ப கேரளாவிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.