உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையில் நீர்தேக்க தீர்மானம்

பெரியாறு அணையில் நீர்தேக்க தீர்மானம்

கூடலூர்:கூடலூரில் இந்திய கம்யூ., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட துணை செயலாளர் பெத்தாட்சி தலைமையில் நடந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பெரியாறு அணையில் உடனடியாக 142 அடி உயரத்திற்கு நீர் தேக்க வேண்டும். கூடலூர் 15வது வார்டில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு தொற்று நோய் பரப்பி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் ராமர், கிளை செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், சந்திரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ