உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தபால்துறை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தபால்துறை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தேனி : தேனி கோட்ட தபால்துறை சார்பில், தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா'' என்ற பெயரில் கல்வி உதவித் தொகை திட்டம் தபால் தலை சேகரிக்கும் மாணவ, மாணவிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இத்திட்டத்தில் ஆறு முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன் பெறலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தபால்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 2 கட்ட தேர்வுகள் நடத்தி , தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை விபரங்களுக்கும், விண்ணப்பத்தையும் www.tamilnadupost.nic.inஎன்ற இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை தென்மண்டல தபால்துறைத் தலைவர், மதுரை மண்டலம், மதுரை - 625 002. என்ற முகவரிக்கு வரும் செப்.1க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை