உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின

சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின

திருநெல்வேலி, : தமிழகத்தில் சாலையில் திரியும் கால்நடைகளால் தொடர்ந்து விபத்து ஏற்படுவதும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது.இந்த வரிசையில், நேற்று திருநெல்வேலி நகர் பகுதியில், இரு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டு மோதியதில், சாலையில் டூ - வீலரில் சென்ற அப்பாவி கோர்ட் ஊழியர், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.திருநெல்வேலி, பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ், 58. திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிந்தார். நேற்று காலை, 8:00 மணியளவில் கோர்ட் சம்மன் கொடுக்கும் பணிக்காக மொபட்டில் திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்றார்.தெற்கு பைபாஸ் ரோடு சீரமைப்பு பணியால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இவர் டூ - வீலரில் சென்ற பகுதியில், சாலையில் திரிந்த இரு மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில், ஒரு மாடு, வேலாயுதராஜ் டூ - வீலர் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்ட அவர், அவ்வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பான 'சிசிடிவி' காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SUBRAMANIAN P
ஜூன் 25, 2024 14:04

கோர்ட் ஊழியருக்கும் இதுதான் கதி. ஒரு ஜட்ஜ் ரோட்டுல திரியுற மாடு முட்டி செத்தா கடுமையான நடவடிக்கை எடுப்பாங்களா அல்லது மூத்த அமைச்சர் யாராவது மாடு முட்டி செத்தா நடவடிக்கை எடுப்பாங்களா? இதுதான் என் கேள்வி..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை