உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  அங்கன்வாடி மையம் மீது குண்டு வீசியவர் கைது

 அங்கன்வாடி மையம் மீது குண்டு வீசியவர் கைது

திருநெல்வேலி: அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி டவுன் உழவர் சந்தை அருகே நேற்று முன்தினம் இரவு, இரண்டு வாலிபர்கள் மதுபோதையில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் தீ வைத்து, அங்கன்வாடி மையம் மீது வீசினர். அதை ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்த தகவலின்படி, திருநெல்வேலி டவுன் போலீசார் விசாரித்தனர். அதில், டவுனை சேர்ந்த அய்யப்பன், 22, உட்பட இருவர் இதில் ஈடுபட்டது தெரிந்தது. அய்யப்பனை நேற்று கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ