உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவர் கொலை

 ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவர் கொலை

திருநெல்வேலி: ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவரும் மோதிக்கொண்டதில், வெட்டி கொல்லப்பட்டனர். திருநெல்வேலி அருகே தச்சநல்லுார் கரையிருப்பை சேர்ந்தவர் மூக்கன், 52; தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் தங்க கணபதி, 50; தனியார் நிறுவனத்தில் காவலாளி. இருவரும் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து, சமீபத்தில் விடுதலையானவர்கள். டிச., 20 இரவு, அப்பகுதியில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையம் அருகே இருவரும் மது அருந்தினர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மூக்கன், அரிவாளால் தங்க கணபதியை சரமாரியாக வெட்டி தப்பினார். இதையடுத்து, தங்க கணபதியின் சகோதரர் முத்துகுமரன், 46, மூக்கனின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினார். இதில், படுகாயமடைந்த மூக்கனும், வெட்டப்பட்ட தங்க கணபதியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூக்கன் சிகிச்சை பலனின்றி, டிச., 21ல் உயிரிழந்தார். தச்சநல்லுார் போலீசார், முத்துகுமரனை கைது செய்தனர். சிகிச்சையில் இருந்த தங்க கணபதியும், நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை