உடற்கல்வி ஆசிரியருக்கு வலை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள மாவடி புதுாரைச் சேர்ந்தவர் மோகன், 54; உடற்கல்வி ஆசிரியர். இவர், நேற்று முன்தினம், பள்ளியில் ஒரு மாணவியை அறைக்கு தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், நாங்குநேரி மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவான உடற்கல்வி ஆசிரியரை தேடி வருகின்றனர்.