| ADDED : மே 02, 2024 08:04 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பச்சைப்பயறு கொள்முதல் 500 டன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த விளைபொருளை மத்திய அரசின் 'NAFED' மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 500 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, 1 கிலோ 65 - 70 ரூபாய் வரை உள்ளூர் சந்தையில் பச்சைப்பயறு விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு, 1 கிலோ பச்சைப்பயறு 85.58 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டம், காஞ்சிபுரம் விற்னைக்குழுவின் கீழ் இயங்கும், செங்குன்றம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு, 400 மெட்ரிக் டன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.மேலும், திருவள்ளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 50, ஊத்துக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, 50 மெட்ரிக் டன் இலக்காகவும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயியின் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகிய விபரங்களுடன், கீழ்காணும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.செங்குன்றம் - முகமது இர்பான் - 79046 20104, கோவர்த்தனன் 89460 06124; திருவள்ளூர் - சிவநந்தினி - 73585 72301; ஊத்துக்கோட்டை - திருநாவுக்கரசு 96002 71009.பச்சைப்பயறு விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.