| ADDED : மே 07, 2024 06:51 AM
சென்னை: சென்னை, ஜாபர்கான்பேட்டையை காந்தி தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 32; ஓட்டுனர். அவரது மனைவி அபிராமி, 28. அவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 7 வயது. இளையமகன் நிரஞ்சன் சாய்க்கு 1 வயது.இரு தினங்களுக்கு முன், மூத்த மகன், 'டிவி' சேனல் பார்த்தபடி, வேர்க்கடலை சாப்பிட்டுள்ளான். அப்போது, கீழே விழுந்த வேர்க்கடலையை நிரஞ்சன் சாய் விழுங்கி உள்ளான். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், தி.நகரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.மேல் சிகிச்சைக்காக, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.