மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
3 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
3 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
3 hour(s) ago
கூவம்: கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி அம்பாளுக்கு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடி எடுத்து வரப்பட்டு, யாகசாலை மண்டபத்தில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, 9:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது.இதில், கூவம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் காலை 7:00 மணிக்கு லட்சுமி, சரஸ்வதி, துர்கா சுவாமிகள் பவழக்கால் சப்பரத்திலும், இரவு 7:00 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 4ம் தேதி காலை 8:00 - 9:00 மணிக்குள் நடைபெறும். வரும் 8ம் தேதி திருக்கல்யான வைபவம் நடைபெறும் என, ஹிந்து அறநிலைய துறையினர் தெரிவித்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago