உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊரக சாலை பணி விரைவில் முடிக்க கலெக்டர் உத்தரவு

ஊரக சாலை பணி விரைவில் முடிக்க கலெக்டர் உத்தரவு

திருவள்ளளூர்:ஊரக வளர்ச்சி துறையில், விடுபட்ட சிமென்ட் மற்றும் சிமென்ட் கல் சாலை பணிகளை வரும் 16க்குள் நிறைவேற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி மற்றும் பயனாளி தேர்வு; ஊரக பகுதிகளில் புனரமைக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை, பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வரும் தற்போது நிலை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இரண்டாம் கட்டமாக இலங்கை தமிழர்கள் வீடு கட்டப்பட்டும் பணி, பிரதமர் வீடு கட்டு திட்டம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் எண்ணிக்கை குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். கலெக்டர் பேசியதாவது:கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான பயனளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை விரைவில் வழங்கி பயனாளிகள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ் விடுபட்ட சிமென்ட் சாலை, சிமென்ட் கல் சாலை பணிகளை, வரும் 16க்குள் முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரகவளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில் குமார், ஊராட்சி உதவி இயக்குனர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ