உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, மொன்னவேடு கிராமத்தை ஒட்டி கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக நேற்று முன்தினம் மாலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆற்றுப் படுகையில் இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஓட்டுனர்கள் தப்பி ஓடினர்.இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ