உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருநங்கையை ஏமாற்றி ரூ.10 லட்சம் ஆட்டை

திருநங்கையை ஏமாற்றி ரூ.10 லட்சம் ஆட்டை

புழல்:புழல் பகுதியைச் சேர்ந்தவர் விமல், 23; புழல் காவல் நிலையத்தில், ஊர்க்காவல் படை வீரர். இவர், விநாயகபுரம், புருசோத்தமன் நகரைச் சேர்ந்த, 38 வயது திருநங்கையுடன் பழகி வந்தார்.திருமணம் செய்து கொள்வதாக கூறி, கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில், திருநங்கை சேமித்து வைத்திருந்த, 10 லட்சம் ரூபாயை, தன் தேவைக்காக வாங்கி, விமல் பயன்படுத்தி இருக்கிறார். தற்போது, திருநங்கையை திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.இதனால் ஏமாற்றமடைந்த திருநங்கை, விமல் தன்னை ஏமாற்றியது குறித்து, புழல் அனைத்து மகளிர் போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.விமல், அதீத போதை பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, நொளம்பூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்து, உடல் நலம் தேறிய பின், அவரிடம், போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ