| ADDED : மே 05, 2024 11:04 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 47.இவரது மனைவி சுதா, 32. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுஏற்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக சுதா கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருத்தணி பைபாஸ் சாலையில், சுதா நின்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த லோகநாதன் மனைவியிடம் தகராறு செய்து கையால் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து லோகநாதனை கைது செய்தனர்.