| ADDED : மே 30, 2024 09:39 PM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த சோம்பட்டு அருகே எடப்பாளையம் கிராமத்தில் லட்சுமியம்மன் கோவில் அமைந்துள்ளது. இம்மாதம், 28ம் தேதி, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர கலசத்திற்கும், லட்சுமியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து லட்சுமியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார, தீபாராதனை நடந்தது.திரளான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று லட்சுமியம்மனை வழிபட்டனர். ஜூன் 9ம் தேதி மாலை, இக்கோவிலில், தீமதி திருவிழா நடக்கிறது.