உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 522 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 522 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், 522 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், நிலம் சம்பந்தமாக 108, சமூக பாதுகாப்புதிட்டம் 93, வேலை வாய்ப்பு வேண்டி 117, பசுமைவீடுகள், அடிப்படை வசதி கோரி 74 மற்றும் இதரதுறை 130 என, மொத்தம் 522 மனுக்கள் பெறப்பட்டன.மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் -வளர்ச்சி சுகபுத்ரா, பொன்னேரி சப்- கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே, திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை