உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் மின்கம்பங்கள்; வாகன ஓட்டிகள் அபாய பயணம்

சாலையோரம் மின்கம்பங்கள்; வாகன ஓட்டிகள் அபாய பயணம்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியிலிருந்து மண்ணுார், நெமிலி வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி பாப்பரம்பாக்கம், கொப்பூர், அரண்வாயல்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் தினமும் இரு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும் உள்ளன.சில இடங்களில் இரும்பு மின்கம்பங்கள் வாகனம் மோதி சேதமடைந்தும் சாய்ந்த நிலையிலும் உள்ளன.இதனால் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.தற்போது ஸ்ரீபெரும்புதுாரில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் அரசு, தனியார், தொழிற்சாலை பேருந்துகள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் திருவள்ளூர் சென்று வருகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் அபாய நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை