உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி -- மாதர்பாக்கம் சாலை 4 வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

கும்மிடி -- மாதர்பாக்கம் சாலை 4 வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து மாதர்பாக்கம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இரு வழிச்சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான டிரைலர் லாரிகள், அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.அந்த சாலையில் உள்ள காயலார்மேடு, நாகராஜகண்டிகை ஆகிய இரு கிராம பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள வளைவுகளில் டிரைலர் லாரிகள் எதிர் எதிரே செல்ல முடியாமல் அடிக்கடி சிக்க நேரிடுகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து, அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், மேலும் மேற்கண்ட இரு கிராம பகுதிகளில் சாலையை ஒட்டி வீடுகள் இருப்பதால், கிராம மக்களுக்கு விபத்து அபாயம் அதிகரித்து காணப்படுகிறது.அதனால் கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் சாலையை விரிவாக்கம் செய்து நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், தொழிற்சாலை நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை